புதிய முதல்வர் பதவியேற்பு
எமது கல்லூரியின் புதிய முதல்வராக திரு. அப்பர் அருணந்திசிவம் அவர்கள் (வயது 50, SLPS GRADE 1, B.A.(Hons), Dip.in.Edu.) கடந்த 23-03-2012வெள்ளிக்கிழமை அன்று பதவியேற்றுள்ளார். கண்டிமாவட்டத்தில் 1993 முதல் அதிபராக கடமையாற்றிய இவர்யா/ஆவரங்கால் நடராஜ இராமலிங்கம் வித்தியாலய அதிபராக 2004 ஆம் ஆண்டு முதல் கடமையாற்றி அதன் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டக்கல்விப் பணிப்பாளராக நியமனம்
யா/உரும்பிராய் இந்துக் கல்லுரியில் 19.02.1999 முதல் இற்றைவர அதிபராகக் பணியாற்றி கல்லுாரியின் பௌதீக வளத்தேவைகள்இ கல்வி அபிவிருத்திஇ அடைவுமட்ட உயர்வு இ இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பவற்றில் பாரிய மாற்றங்களைஇ வளர்ச்சியை ஏற்படுத்த மாணவர்கள்இ ஆசிரியர்கள்இ பழைய மாணவர்கள்இ பெற்றோர்கள்இ கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களுடன் சிறப்பான தொடர்புகளை ஏற்படுத்தி நுாற்றாண்டு விழாவையும் கோலாகலமாக ஏற்பாடு செய்து நடாத்தி பாராட்டுக்களைப் பெற்ற எமது அதிபர் திரு. அப்பாத்துரை ஈஸ்வரநாதன் அவர்கள் உடுவில் கோட்டத்தில் கோட்டக்கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.